பைத்துல் ஹிக்மா
ஐரோப்பா கி.பி 5ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை பின் தங்கிய நிலையில் இருந்தது. அதாவது ஜரோப்பா இருண்ட யுகம் என அழைக்கப்பட்டது. கி.பி 5ஆம் நூற்றாண்டு உரோம ராச்சியம் மிலேச்ச சாதியினர் படையெடுப்பால் நிலை குலைந்தது.தற்பொழுது ஜேர்மனியும் இத்தாலியும் ஜேர்மன் சக்கரவர்தியினால் ஆட்சி செய்யப்ட்டது.பின் போப்பாரைச தலைவராக கொண்டு இருந்தது .இவ்வாறே ஐரோப்பா இருந்தது.
கி.பி 529 இல் எதேன்ஸில் உள்ள அகடாமி(school of Athens )மூட பேராசர் ஜஸ்டின் உத்தரவு இட்டார்.இங்கு உள்ள அறிஞர்கள் பாரசிகத்திற்கு இடம் பெயர்ந்தனர். காரணம் அங்கு கிறிஸ்தவ மதம் பரவியது அது அறிவியல் கிறிஸ்தவ மத்திற்கு எதிரானது என்பதேயாகும். கொஸ்மஸ் என்ற துறவி புவி கோளவாடிவமானது என்பதை மறுக்கும் நோக்கத்துடன் கி.பி 547இல் (Topographia christiana) என்ற நூலில் உலகம் செவ்வக வடிவான பெட்டியில் அமைந்தாகும்.பெட்டியினுள்ளே சமுத்திரத்திலிருந்து மக்கள் குடியேறி உலகு மேல்லெலுகின்றது.
அது சுவர்க்கத்தினால் சுழப்பட்டிருக்கின்றது வடக்கில் கூம்புவடிவான மலையை சுற்றி சூரியனும் சந்திரனும் சுற்றி வருகின்றன என்று குறிப்பிட்டார். இதனை பிஸ்ஸி என்பவர் படு முட்டாள்தானம் என வரணித்தார். பாரசிக்கத்தில் கோண்ஷ ஷோபூர் எனும் நகரில் மத்திய நிலையமாக செய்பட்டு வந்தன. இஸ்லாமிய இரச்சியம் உருவாகிய பின்னர் அலெக்ஸாந்திரிய்யா,இஸ்காந்திரியா,சிரியா, பலஸ்தின், எகிப்து அகிய பகுதிகளில் பரந்து வளர்ந்தது.
உமைய்யாக்கால் காலத்தில் முஆவியா (ரழி) புத்தகங்கள் சேகரிக்க தொடங்கினார்.இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மருத்துவம், இரசாயனவியல், பௌதிகவியல், வானவியல் உள்ளிட்ட நூல்களைில் பிற மொழி நூல்களான கிரேக்கம்,லத்தின்,பாரசிகம் நூல்களை மொழி பெயரக்க ஆரம்பித்தனார். சினர்களிடமிருந்து காகிதம் தயாரிக்கும் நூட்பத்தை கற்றுக் கொண்டு புத்தகளாக்கினர்.முஆவியா (ரழி) யின் பேரரன் காலித் பின் யஸீத் என்னபவர் கிரேக்க துறவியான மரியானஸ் என்பவரிடம் மருத்துவம்,இரசானவியல்,வானவியல்,தத்துவம் போன்ற விஞ்ஞானக் கலைகளை கற்றார்.
கி.பி 750இல் அப்பாஸியர் ஆட்சிக்கு வந்தனர்.கி.பி 754இல் கலிபா ஜஃபர் அல்-மன்சூர் கலிபாவாக அபுல் அப்பாஸால் நியமிக்கப்படுகின்றார். அதன் பின் தனது தலைநகரை பாக்தாத் நகரிற்கு மாற்றுகின்றார்.யூப்ரதீஸ், தைக்கிறிஸ் நதிக்கரையோரம் நிர்மாணிக்கப்பட்டது.நீர் பஞ்சம் எற்படாத வகையில் கால்வாய் மூலம் நீர் வசதி செய்யப்பட்டது. வட்ட வடிவான அமை்ப்பில் அரச மண்டபம், பள்ளிவாயில் அமைக்கப்பட்டன.நகரைச்சுற்றி பாதுகப்பு மாதி்ல்கள் அமைக்கப்பட்டன.கி.பி 762இல் 2கோடி தினார்கள் செலவு செய்யப்பட்டது.இந்த பாக்தாத் நகர் கி.பி 762 இல் சமாதனத்தின் நகர் என்ற (city of peace) அழைக்கப்பட்டது.முஸ்லிம்கள், கிறிஸதவர்கள், யூதர்கள், நெருப்பு வணங்குபவர்கள் மற்றும் பல தெய்வ வாழிபாடும் மக்கள் இருந்தனர்.அரபு இனம் முல் பாரபர் இனம் வரை வாழ்ந்தனர்.இந்த நகர் நிர்மணம் செய்த பின்பு பல்வேறு அறிஞர்கள் குடியந்தனர்.அத்துடன் ஆறிவு பணியை மேற் கொண்டனார்.
கலிபா மன்சூர் தனது அரண்மனையில் ஒரு நூலகத்தை நிறுவினார். அங்கு பல மொழி நூல்கள் சேகரிக்கப்பட்டன். அவ்வாறு சேகரிக்கும் நூல்களை 'கஸானதுல் ஹிக்மா' என்ற பிரிவும் இருந்தது. இயூகிலிட், தொலமி, ஹிப்ரோகரடிஸ், கலன், அரிஸ்டோட்டில், பிரம்ம குப்தா மற்றும் அரியப்பட்டா உள்ளிட்ட அறிஞர்களின் நூல்கள் முக்கியமானவை.
இந்த மொழி பெயர்ப்பு நிலையத்தில் பலர் அறிஞர்கள் பணியாற்றினர். ஹுனைன் பின் இஸ்ஹாக், யுஹன்னா, ஈஸா பின் யஹ்யா, ஸாபித் பின் குர்ரா, மூஸா பின் யாஸார், இப்னு முகப்பஉ போன்ற பிரசித்தி பெற்ற அறிஞர்கள் பணியாற்றனர். இங்கு பல அறிஞர்களின் புத்தகம் அரபு மொழிக்கு மாற்றப்பட்டது.
தொலமியின் நூல்களான Geography என்ற நூலை கி.பி 874க்கு முன்னர் யாக்கூப் பின் இஸ்ஹாக், அல் கிந்தி மற்றும் தாபித இப்னு குர்ரா மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. தொலமியினால் எழுதப்பட்ட அல்-மஜெஸ்ட், டெற்ராபிபிலன் (Tetrabiblon) அகிய நூலும் மொழி பெயர்க்கப்பட்டது.
மேலும் டைரேயைச் (tyre) சேர்ந்த (Marinos) மரினோஸின் புவியியல் நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அரபு புவியியல் அறிஞர்கள் 'ஏழு கிஷவாரைக் குறிக்க கேத்திர கணித முறைப்படி எழு சம வட்டங்களாக உலகத்தை வட்ட வடிவான ஏழு பிராந்தியமாக பாகுபாடுத்தினார்.
இது பாபிலோனியர்களின் ஏழு கிரகங்கள், எழு நாட்கள் என்ற ஏழு இலக்தை தெய்விகதன்மை வாய்ந்தாக பயன்படுத்தினர், அரிஸ்டோட்டல் எழுதிய Meteorology, De Caelo என்ற நூல்களும் பிளேட்டோவின் (Timeus) நூல்களும் குறிப்படத்தக்கது.
இந்திய மொழி நூல்கள் கலிபா மன்சூர் காலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. சமஸ்கிருத நூலான சூரிய சித்தாந்தம் அரபு மொழி பெயர்க்ப்பட்டது. என்ற நூலை வைத்து வானியல் மற்றும் புவியியல் புத்தகங்கள் எழுதப்பட்டது.
இப்ராஹிம் பின் ஹபீப் அல் பஸாரியால் எழுப்பட்ட கிதாபுல் ஸிஜ், குவாரிஸ்மியால் அல் ஸிந்ஹிந்துல் ஸஹீர், அல் மாவாஸியால் அல்-ஸிந்து ஹிந்து அகிய நூல்களுக்கு அடிப்படையாகும். மேலும் கந்தக் கடையாகவும், ஆரியப்பட்டாரால் எழுதப்பட்ட ஆரியப்பட்டியம் நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டது.ஆரம்ப கால புவியியல் அறிஞார்களின் பயன்பாட்டில் உலகிற்கு மைய்யம் ஒன்று உண்டு என்ற கருத்து இதன் மூலம் பெறப்பட்டது.
ஹருன் ரஷிதின் யாஹ்யா பர்மகியின் தூண்டுதலால் தொலமியின் major Astronomical Syntaz அரபு மொழிக்கு மாற்றப்பட்டது. இப்ராஹிம் அல் பஸாரி வானியல் அறிவைக்க கொண்டு Astrolabe கருவியைக் கண்டு பிடித்தார். வானியல் அட்டவணை தயாரித்த அவர் சந்திர ஆண்டுக்கு பொருந்தும் வகையில் ஒழுங்கமைத்தார். கலிபா மஃமுன் காலத்தில் 'கிதாப் பில் அமல் அல் உஸ்துர்லாப்' கொண்டு Astrolabe கருவியின் பிரயோசனம் பற்றி நஸர் என்பவர் குறிப்பிடுகினறார். குவாரிஸ்மி சித்தாந்த நூலை மொழி பெயர்ப்பு செய்து 'அஷ்ஷீஜ்' என்ற புதிய வானியல் அட்டவணையை அமைத்தார்.
இது 'அஷ்ஷீஜுல்
கபீர்' 'அஷ்ஷுஜுல் ஸகீர்’’, என்று இரண்டு அட்டவணைகளை அமைத்தார். பைத்துல் ஹிக்மாவின் மொழி பெயர்ப்பளர்
அபுல் அப்பாஸ் அல் பர்கானி தொலமியின் கருத்துக்களை விளக்கும் வகையில்'அல்மத்கலு இலா இல்மிஸ் பலகி'என்ற நூல் விஞ்ஞானி கொப்பநிக்கஸின் காலம் வரை மேற்கு உலகில் செல்வாகு செலுத்தியது. ஜரேப்பா விஞ்ஞானிகள் இவரின் பெயரை சந்ததிரன் முகப்புக்கு ஒர் அலகுக்குசூட்டப்பட்டுள்ளது.இப்னுல்ஹைஸம் தொலமியின் அல்மெஜஸ்டின் நூலை ஆய்வு செய்து திருத்தி 'தஹ்தீபுல் மஜெஸ்தி' என்ற நூலை எழுதினார்.
சந்திரன் முகப்பின் 12ஆம் அலகு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாஸிருத்தீன் அத்தூஸி என்பவர் தொலமியின் வானியற் கருத்துக்களுக்கு திருப்தி காணத அதனை விமர்சனம் செய்து 'தஸ்கிரா பீ இல்மில் ஹய்ஆ' என்ற நூலை எழுதியுள்ளார். இவ்வாறு பலர் தமது பங்களிப்பை செய்ய அத்திவாரம் இடப்பட்டது.
பாக்தாத் நகர் செழிப்புற்று விளங்க காரணமா அமைந்தது.புத்தகங்கள் சேகரிப்பை விருப்பமாக கொண்டனர்.விஞ்ஞான மற்றும அறிவியல் துறை மதிப்பு வாய்ந்த துறையாக விளங்கியது. பல பெறயிலாளர்கள் இருந்தனர். இவர்கள் தமது பணியை நாட்காட்டி (கலெண்டர்) வைத்து தமது பணியை மேற் கொண்டனர்.
கலிபா மஃமுன் தினமும் பைத்துல் ஹிக்மாவின் பணியை அவதானிப்பர். கலிபா மஃமுன் அரிஸ்டாேடலின் தத்துவதால் கவரப்பட்டு அதனை பயின்றார். தினமும் தத்துவ நிபுணர்கள் இடையில் விவாதிப்பார். இடையில் பல குழுக்கள் அமைத்து கீசா பிரமிட் ஆய்வுகளில் பங்கு கொண்டார.
உலக வரை படத்தை வரைவும் நடவடிக்கை மேற் கொண்டார். வானியல் ஆய்வு கூடங்கள் நிறுவப்பட்டமை கலிபா மஃமுனால் (கி.பி 829) ஹிஜ்ரி 214 இல் பாக்தாத் தத்மீர் சமவெளியில் 'ஷம்ஸிய்யா' என்ற பெயரில் நிறுவினர். இவர் அரசவையில் இருந்த விஞ்ஞானிகளை அஹ்மத், முஹம்மத் ஹஸன் அகிய இருவரும் புவியின் சுற்றாளவு,விட்டம் என்பவற்றை கணப்பிடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுற்றாளவு 20400 மைல்கள் என்றும் விட்டம் 6500 மையில்கள் என்றும் கணிப்பீடு செய்யப்பட்டது.
இதில் பணியாற்றிய பல விஞ்ஞானிகள் பல படைப்புகளை வழங்கியுள்ளார்.
இவற்றால் எற்றபாட்ட விளைவு சுருக்கமாக விரிக்கலாம். பலர் ஆய்வுகளை மேற்கொண்டு புத்தகங்கள் எழுதியுள்ளனர். அர்ராஸியின் 'அல் ஹாவி' என்ற புத்தகம் இந்த நூலை ஐரோப்பியர் "மருத்துவக் கலைக் களஞ்சியம்" என்று அழைத்தனர்.சுகாதாரம், நோய்களுக்கான சிகிச்சை முறை, மருந்துவகைகள் இதில் உள்ளது. இந்த புத்தகத்தை யூத மருத்துவர் பரஜ் பின் ஸாலிம் இலத்தின் மொழிக்கு மாற்றப்பட்டது. இதன் இன்னுமொரு மொழி பெயர்ப்பு (liberDictus Elhavi) என லத்தின் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது.
இதில் பணியாற்றிய பல விஞ்ஞானிகள் பல படைப்புகளை வழங்கியுள்ளார்.
இவற்றால் எற்றபாட்ட விளைவு சுருக்கமாக விரிக்கலாம். பலர் ஆய்வுகளை மேற்கொண்டு புத்தகங்கள் எழுதியுள்ளனர். அர்ராஸியின் 'அல் ஹாவி' என்ற புத்தகம் இந்த நூலை ஐரோப்பியர் "மருத்துவக் கலைக் களஞ்சியம்" என்று அழைத்தனர்.சுகாதாரம், நோய்களுக்கான சிகிச்சை முறை, மருந்துவகைகள் இதில் உள்ளது. இந்த புத்தகத்தை யூத மருத்துவர் பரஜ் பின் ஸாலிம் இலத்தின் மொழிக்கு மாற்றப்பட்டது. இதன் இன்னுமொரு மொழி பெயர்ப்பு (liberDictus Elhavi) என லத்தின் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது.
அர்ராஸியின்
கிதாப் அல் ஜுதரி வல் ஹஸ்பா என்ற நூல் அம்மை பற்றிய நூலாகும். சிறிய அம்மை,பெரிய அம்மை அதன் அறிகுறி பாதிப்புகள்
என்பன இந்த நூலில் உள்ளது. இந்த நூல் 1498ஆம் ஆண்டுக்கும் 1866க்கும் இடையில் நாற்பது தடவை மொழி மாற்றம் செய்யப்படது. 1548 கிரேக்கம்,1763 இல் பிரஞெ்சு, 1848 இல் ஆங்கிலம், 1911 இல் ஜேர்மன் அகிய மொழிகளில் மற்றப்பட்டது.
இது பொது சுகாதரம், காய்ச்சல், வீக்கம் என்பன பற்றி குறிப்பிட்டுள்ளது. இது ஜொராட் என்பவரால் 'லைபர் அல்
மன்ஸோரிஸ்' (Liber Almansoris) என்று இலத்தின் மொழிக்கு மாற்றப்பட்டது. அலி
இப்னு ஸீனாவின் அல்கானூன் திப்பி என்ற நூல் மருத்துவத்தின் வேதகாமம் என அழைக்கப்ட்டது.
கிதாபுஷ் ஷிபா என்ற நூல் ஒரு நாளுக்கு 50 பக்கங்கள் என்ற அளவில் எழுதி முடித்தார்.
'அர்ஜூஸா பித்திப்பி' 'அத்வியதுல் காலிபா' ஹுதூத் அத்திப்பி போன்ற மருத்துவ நூல்கள் கிடைத்தது.
அஸ் ஸஹ்ராவியின் மருத்துவ நூல் மருத்துவத்தில் புரட்சியை எற்படுத்தியது. இதில் அறுவை சிகிசசைக்கு உபகாணங்கள் பயண்பாடு கண், காது, மூக்கு, வாய் அறுவை சிகிச்சை பற்றிய நூல் ஆகும்.கிதாபுல் அவந்திய்யா எனும் உணவு பற்றிய நூல் இப்னு ஸுஹ்ரால் எழுதப்பட்டது. அல் பஸாரி யால் உஸ்துர்லாப் கருவியை கண்டு பிடித்தமைக குறிப்பிடத்தக்கது.மாஷா அல்லாஹ் என்பவர் வானியல் தயாரித்தார். பாக்தாத் நகர வரைபடத்தை தயாரிப்பதில் ஈடுபட்டார். குவாரிஸ்மியால் அஷ்ஷீஜ் எனும் வானியல் அட்டவணையை தயாரித்தார்.
மேலும்'கிதாபுஸுரதுல் அர்ழ்(shape of the earth)புத்தகமும் முக்கியமானது. அபுல் அப்பாஸ் அல்-பர்கானி என்பவர்" ஹரகாத் அஸ்ஸமாவிய்யா வஜவாமி இல்மின் நுஜூம்"என்ற பெயரில் நச்சத்திரங்களின் நகர்வு விளக்கும் வகையில் எழுதப்பட்டது.அல் பதானியின் ஒர் ஆண்டின் நீளம் 365 நாட்கள்,5 மணித்தியாலங்கள்,46 நிமிடங்கள்,24 வினாடிகள் என்பதை கண்டு பிடித்தார்.'கிதாபுல் மஃரிபதில் மதாலி அல்-புரூஜ் பீ மா பய்னஸ்,ரிஸாலா பீ தஹ்கீக் மிக்தாரில் இத்திஸாலா என்ற புத்தகததில் நச்சத்திரம்,சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் பருவமாற்றங்கள் என்பவற்றை விளக்கம் கொடுத்தார்.நாஸிருந்தீன் அத்தூஸியின் கிதாபுல் முவஸ்ஸியா பய்னஸ் ஹின்தஸா வல் ஹய்ஆ,அத்தஸவ்வுராத் எனும வானியல் நூல் எழுத்தப்பட்டது.அல் கிந்தியுடைய'ரஸ்முல் மஃமூர் மினல் அர்ழ்' (Description of the inhabited part of earth) என்ற புத்தகமும் அல்-இத்ரிஸியின் 'கிதாபுர் ருஜாரி'(ரோஜரின் புத்தகம்)உள்ளிட்ட பல படைப்புகள் கிடைப்பதற்கு இந்த அறிவகம் பெறிதும் பங்கற்றியது அத்தோடு இஸ்லாமிய பொற்காலம் என்ற காலம் உருவாகவும் முஸ்லிம்கள் பல துறைகளில் சதித்தவர்கள் என்ற வரலாற்றுப் பதிவும் மேலும் பலரும் அறியாத ஒரு விடயம் ஐரோப்பாவின் மறு மலர்ச்சிக்கு அடிப்படையாக இருந்து என்பதை மறுக்க முடியாது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home