Tuesday, September 8, 2020

இஸலாமிய கலாச்சார மத்திய நிலையங்கள்

 

இஸலாமிய கலாச்சார மத்திய நிலையங்கள்


பஸரா

இரண்டாம் கலிபா உமர்(ரழி)யின் கட்டளைக்கு அமைய கி.பி 637/638 இல் இந்த நகர் உருவாக்கப்பட்டது.இது பக்தாத்துக்கு தென்மேற்கே 300 மைல் தொலைவில் ஈராக்கில் உள்ளது.
உமர் (ரழி)யின் காலத்தில் இது இராணுவ நகராகவே விளங்கியது.இஸலாமிய வரலாற்றோடு பஸரா பல முக்கிய சந்தர்ப்பங்களில் நெருங்கிய தொடர்புகளை வகித்திருப்பதை அவதானிக்க முடியும்.ஆயிஷா (ரழி) வுடன் சேர்ந்து தல்ஹா (ரழி),சுபைர் (ரழி) அகிய இருவரும் அலி (ரழி) க்கு எதிராக எதிர்ப்பை ஆரம்பித்த இடம்தான் பஸராதான். இந்த நகருக்கு அருகில் உள்ள 'குறைபா' என்ற இடத்தில்தான் 'ஒட்டகையுத்தம்' இடம் பெற்றுள்ளது. உமைய்யாககள் காலத்தில் குராஸான் மகாணத்தின் தலைநகராக விளங்கியது.
ஹஸன் பஸரி (ரஹ்),ராபிய்துல் அதவிய்யா போன்ற ஆன்மீக அறிஞர்கள் பஸாரவிலேயே தம் கருத்துக்களைப் பெருக்கினர். முஃதஸிலா கோட்பாட்டை ஆதரித்தவர்களைப் போலவே, அதனை எதிர்த்த அபுல்ஹஸன் அல் அஷ்அரி (ரஹ்) போன்றோரும் பஸராவில் வாழ்ந்தவர்ளாவே உள்ளார்கள். இந்த இரு சாராருக்குமிடையில் 'இஃவானுஸ்ஸபா' எனும் கொள்கையை அமைக்க விரும்பியவர்களின் மத்திய நிலையமாகவும் இது அமைந்துள்ளது.
அப்பாஸிய ஆட்சிக்காலத்தில் நாகரிகத் துறையிலும் பொருளாதரத் துறையிலும் பஸரா வளர்ச்சிகண்டது. பண்டைக்காலத்து பிரசித்தி பெற்ற 'ஒபோலா' துறைமுகத்துக்கு அருகே அமைந்திருந்த பஸரா, அதிலிருந்து இரு கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டிருநதால் கப்பல் போக்குவரத்து வாய்ப்புகளைக் கொண்டிருந்தது. இதனால் அதன் பொருளாதரம் வளார்ச்சி கண்டது. பஸராவில் பள்ளிவாசல்கள்,கல்லுரிகள், வைத்திய சாலைகள், நூல் நிலையங்கள் காணப்பட்டன. இவை பஸராவின் வேறு துறை வளர்ச்சியையும் நிரூபிக்கின்றது.

கூபா

இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்கள், துறைமுக நகராகவும் உள்நாட்டு தொடர்புகளை கொண்ட நகராகவும் உள்ள நகர் ஒன்றை அமைக்குமாறு கூறிய கட்டளைக்கிணங்க, இது ஹிஜ்ரி 17/18 இல் அமைக்கப்பட்டது. சுமார் 40000 மக்கள் வாழப் போதுமானளவு, வீடுகளை அமைக்க வசதியுள்ள இடத்தை, கூபா கொண்டிருந்தது.
இஸ்லாமிய சாமராஜ்யத்தின் கிழக்கே, அரசியல், இராணுவ,வர்த்தக வாய்ப்புகளில் கூபா சிறப்பான வசதிகளைக் கொண்டிருந்ததால் வர்த்தக,கைத்தொழில் முயற்ச்சிகள் அதிகரித்தன. இராணுவ உயர் அதிகாரிகள், நிர்வாக உத்தியோகத்தர்கள், அறிஞர்கள்,கலைஞர்கள்,வர்த்தகர்கள் முதலான பல்துறையைச் சேர்ந்தவர்களும் இந்த நகரில் வந்து குடியேறினர்.

உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சியில் அரசுக்கு எதிராக எழுந்த கிளர்ச்சிகள் கூபாவிலும் தலைதூக்கியதால், கூபாவின் அரசியல் முக்கியத்துவம் கூடியது. அலி (ரழி) கூபாவை தலைநகராக்கியது அதனை மேலும் பெறுக்கியது. அலி (ரழி) யின் பின்னர் யஸித் பின் முஆவியா  கலீபாவாக பதவியேற்றதை ஆட்சேபித்து, ஹுஸைன் (ரழி) அவர்களை ஆதரித்து, கூபாவாசிகள் போராடினர்.கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னும், அவர்களுக்கு ஆதரவாக 'முஃதார்' என்பவர். மேற்கொண்ட போரட்டத்திற்கு கூபாவாசிகள் ஆதரவளித்தனர். இககாலகட்டததில் பெரு முக்கியம்  வாய்ந்த நகராக திகழ்ந்த கூபா, பின்னர் கலீபா அப்துல் மலிக் அவர்கள் கவனார் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அவர்கள், தம் நிர்வாக தலைமை நகரை, கூபாவிலிருந்து 'வாஸித்' துக்கு மாற்றியதோடு முக்கியத்துவத்தை இழந்தது.
இங்கு தப்ஸிர்,அல்ஹதீஸ்,பிகஹ் முதலிய கலைகளும் மொழி இயலும், பகுத்தறிவுச் சிந்தனையும் வளர்ச்சி கண்டன்.'கூபி' எழுத்துக்கள் என்று அறிமுகமாகிய அறபு எழுத்துவகை கூபாப் பகுதியிலிருந்துதான் அறிமுகமாகியது. இக்காலப் பகுதியின் இஸலாமிய சிந்தனையிலே, கூபா அறிஞ்ர்களின் முயற்சியினாலேயே, பகுத்தறிவின் செல்வாக்கு மிகைத்தது எனலாம்.

கோர்டோவா


ஸ்பெயினை ஆட்சிசெய்த உமைய்யா கோத்திர திகழ்ந்தது. ஐரோப்பாவின் எந்தவொரு நகரும் பெற்றிடாத சிறப்பை கோர்டோவா பெற்றது.
கோர்டோவாவின் வீதிகள் சுத்தமாக இருந்தன. இருமருங்கும் சோலைகள் அமைந்திருந்தன.இராக்காலங்களில் வீதிகள், விளக்குகளால் ஔி வெள்ளித்தில் மிதந்தன.50 மருத்துவமனைகளும்,900 பொது குளியறைகளும்,600 மஸ்ஜித்களும்,80 கலாசாலைகளும் அங்கு அமைந்திருந்தன.பல நூல் நிலையங்களும் காணப்பட்டன.
கோர்டோவின் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல்,கட்டிக்ககலை நுட்பத்தின் கலைச் சின்னமாக திகழ்ந்தது. அதன் அழகை மிஞ்சுக் கூடிய வேறறெந்த பள்ளிவாசலும் இன்னுவரை அமைக்கப்படவில்லையெனக் கூறப்படுகிறது. அதன் மினாரா 75 அடி உயரமுடையது.4700 விளக்குகள் இப்பள்ளிவாசலுக்கு ஔிகொடுத்தன. இப்பள்ளவாயில் வணக்கத்தலமாக மட்டும் அலலாது கல்விக்கூடமாக பயன்படுத்தப்பட்டது.
உலக அதிசயங்களில் ஒன்றென வரலாற்றாசிரியர்கள் மெச்சும் இன்னொரு கலைப்படைப்பு கோர்டோவாவிலுண்டு. அது 'அஸ்ஸஹ்ரா' என்றழைக்கப்பட்ட அரச மாளிகை. இம் மாளிகையின் தளம் பல நிற, பல வடிவ அலங்கார பளிங்குகளால் அலங்கரிப்பட்டிருந்தது. சுவர்களுக்கு ஆகாய நீல நிறத்திலும், பொன் நிறத்திலும் வர்ணம் பூசப்பட்டிருந்தது. மாளிகயைினூடே ஒடிய நீரோடையில் நீர் ஒரு புறமிந்த நீர்த்தொட்டியை அடைய, அத்தொட்டியுள் பல்வேறு நிற மீன்கள் வளர்க்கப்பட்டன. 'கஸ்ர் அல் கிலாபத்' என்று அழைக்கப்பட்ட அந்த மாளிகையின்,வரவேற்புக் கூடத்தின் கூறையின், உட்புறத்தோற்றம்,தங்க தகடுகளுக்கிடையே பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டிருப்பதை போன்று காட்சி தருமாறு அலங்கரிக்கப்பட்டது. வரவேற்புக்கூடத்தின் எட்டு வாயில்களும் யானைத் தந்தங்களினாலும், கருங்காலிக் கட்டைகளாலும் செய்யப்பட்டு, முத்துக்களும் இரத்தினங்களும் கொண்டு அழகுபடுத்தப்பட்டன. இந்தவொரு மாளிகையே போதும் , கோர்டோவா நகரம்,பல் வேறு துறைகளில் முன்னேற்றம் கொண்ட, நாகரிக,பண்பாட்டு மைய்யமாக திகழ்ந்தது என்பதற்கு பிரபல புவியியல்  வல்லுனார் 'ஹவ்கல்' கோர்டோவை தரிசித்த போது " இதன் சிறப்பிற்கு சிரியாவோ எகிப்தோ இணையாகாது" எனறு குறிப்பிட்டுள்ளார்.
கோர்டோவா கலைப்பொருட்களுக்கு வரவேற்பளித்த நகராகும். உலகில் பல்வேறு பாகங்களின் கலைப்பொருட்களும்,கோர்டோவாவில் உருவாக்கப்பட்ட கைப்பணிப் பொருட்களும் சந்தைகளை அலங்கரித்தன. யானைத் தந்தங்களால் செய்யப்பட்டு,நுட்பமான எழுத்தணி அலங்காரங்கள் செய்யப்பட்ட பேழைகள், கோர்டோவா வாசிகளின் கலைத்திறனுக்கான சிறந்த உதாரணமாகும்.
வானியல்,இரசாயனவியல்,மருத்துவவியல் போன்ற துறைகளில் வளர்ச்சியடைந்திருந்த மேலை நாடு கோர்டோவாதான். கோர்டோவாவின் நூல் நிலையத்தில் நான்கு இலட்சம் நூல்கள் காணப்பட்டன.மேற்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த அறிஞர்களும் கோர்டோவாவில் மதிப்பளிக்கப்பட்டனர்.
யூத,கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் கோர்டோவாவில் பரஸபர புரிந்திணர்வுடன் வாழ்ந்தனர். ஐரோப்பாவில் இஸ்லாமிய நாகரிகம் அறிமுகப்படுத்தவற்கு கோர்டோவா களம் அமைத்தது எனின் அது மிகையாகாது.


டமஸ்கஸ்


அறபு மொழியில் 'திமஷ்க்' என்றழைக்ப்படும் டமஸ்கஸ்,சிரியாவின் மிகப் பெரிய நகரமாகும்.இந்தநகர் அறேபியாவின் இஸ்லாத்தின் தோற்றத்தின் முன்பே அரசியல் பிரபல்யம் வாய்ந்தாய் காணப்பட்டது.கி.மு 10 ஆம் நூற்றாண்டில் 'ஆர்மீனியா' டமஸ்கஸ்ஸில் இருந்ததுதான் அரசாண்டர்.
கி.பி 636 இல் டமஸ்கஸ் முஸ்லிம்களின் ஆட்சிக்குட்பட்டது. அது முதல் உமைய்யாக்கள் ஆட்சிவரை மேற்கு பிராந்தியத்தின் தலைநாகராக அது விளங்கியது. உமைய்யாக்கள் ஆட்சிக்கு வந்த பின், டமஸ்கஸ் முஸ்லிம்களின் சாம்ராஜயத்தில் தலைநகராக பிரபல்யம் பெற்றது. பின்னர் அப்பெரும் ஆட்சியின் போது தலைநகர் பக்தாத்துக்கு மாறியதால் இதன் செல்வாக்கு குறைந்தது.
கி.பி 868 லிருந்து கி.பி 1516 வரை  டமஸ்கஸ் மாறிமாறி பல ஆட்சியாளர்களின் பரிபாலனத்திற்குட்பட்டுக் கொண்டிருந்தது. சிலுவை யுத்தங்களும் டமஸ்கஸை பெரிதும் பாதித்தன. கி.பி 1516 இல் டமஸ்கஸ் துருக்கிய உஸ்மானியர்கள் பரிபாலத்துக்கு உட்பட்டது.
டமஸ்கஸ் பைஸாந்தியர் ஆட்சிக்கு உட்பட்ட போது அங்கு கம்பிரமான கிறிஸ்தவ தேவாலயகளும், அரசமாளிகைகளும் அமைக்கப்பட்டன. உமைய்யா ஆட்சியாளர்களும் பல அழகிய கட்டங்களை அமைத்தனர். கலீபா வலீத் கட்டிய 'டமஸ்கஸ் பெரியபள்ளி' உமைய்யாக்களின் கலைத் திறனை நன்கு எடுத்தியம்பிய வல்லது. அல்குலபாஉர் ராஸிதூன்கள் கால முதலே டமஸ்கஸின் கல்வி வளர்ச்சியில் கவனம் கொள்ப்பட்டது. அபூதர்தா (ரழி) டமஸ்கஸ் பள்ளிவாசலில் 'பஜ்ர்' தொழுகையின் பின் வகுப்புகளை நடாத்தினார்கள். இதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
டமஸ்கஸில் கிரேக்க வழிமுறைக் கலைகளும்,அல்குர்ஆன்,அல்ஹதீஸ்,பிக்ஹ் முதலிய கலைகளும் வளர்ச்சி கண்டன. இஸ்லாமிய கல்விப்போதனைக்காக குத்தாப்,மஸ்ஜித்,மத்ரஸா முதலியன அமைக்கப்பட்டன. பல மருத்துவக்க கல்லூரிகள் நிறவப்பட்டன. சுல்தான் நூருத்தீனும்,சுல்தான் ஸலாஹுத்தீனும் பிரபலமான கல்லுரிகளை அமைத்தனர். டமஸகஸின் கலாசாலைகளின் 'அந்நூரிய்யா அல் குபறா'வும் , மத்ரஸா அல்முஸ்தன்ஸிரியா வும் புகழ்மிக்கனவாகும்.டமஸ்கஸில் நான்கு 'மத்ஹப்' களையும் சேர்ந்த  சட்டக்கலைகள் போதிக்ப்பட்டன. டமஸ்கஸின் 'நூரி வைத்தியசாலை' முஸ்லிம் உலகின் முக்கிய வைத்தியசாலைகளில் ஒன்றாகும். இது எழைகளுக்கு மட்டுமே

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home