Wednesday, September 16, 2020

இஸ்லாமிய பொற்காலத்தில் வைத்தியசாலைகள்

 இஸ்லாமிய பொற்காலத்தில் வைத்தியசாலைகள்



ஆரம்ப இஸ்லாமிய மருத்துவமனைகள் நபி (ஸல்) காலத்தில் நடமாடும் மருத்துவமனையாக இருந்தது. இது இஸ்லாமிய நாகரிகத்தில் பாரம்பரியமாக இருந்தது. கி.பி 706ஆம் ஆண்டு டமஸ்கஸஸில் முதல் மருத்துவமனை கட்டப்பட்டது.இது அனைத்து வகை நோயாளிகளை உள்ளாடக்கியது.இதன் அமைப்பை பின்பற்றியே பிற மருத்துவ மனைகள் உருவானது. கலிபா ஹருன் அல் ரஷித் மற்றும் அல் மன்சூர் இருவரின்  காலத்தில் பாக்தாதில் மருத்துவமனை கட்டினார்.

கெய்ரோவில் குறிப்பிடத்தக்க கவலூன் மருத்துவமனையை வைத்திருக்கும் கலவன் வளாகத்தின் நுழைவு

கி.பி 805 ஆம் ஆண்டு பாக்தாதில் ஹருன் ஆல் ரஷித்தின் உத்தரவின் பெயரிலே கட்டப்பட்டது. கெய்ரோவில் முதல் மருத்துவமனை அல்-புஸ்தாடில் 872 இல் அளுநர் இப்னு துலுளைனால் நிறுவப்பட்டது.மேலும் பக்தாதில் 982 இல் ஆட்சியாளரான அதுத் அல்-தவ்லாவால் கட்டப்பட்டது. 12,13 நூற்றாண்டுகளில் சிரியா-எகிப்து அகிய நாடுகளில் பல மருத்துவமனைகள் இருந்தது. 10ஆம் நூற்றாண்டில் பாக்தாதில் ஐந்து மருத்துவமனைகளும் அதே நேரம் டமஸ்கஸ்ஸில் 15ஆம் நூற்றாண்டில் 6 மருத்துவமனைகளும் கோர்டோவாவிலும் 50 பெரிய மருத்துவமனைகளும் இருந்தது. இதில் பல இராணுவ வைத்தியசாலைகள் பல இருந்தது.


13ஆம் நூற்றாண்டில் எகிப்தின் ஆளுநர்  அல்-மன்சூர் ஒரு பள்ளிவாயில் மற்றும் தேவாலயம் அமைத்தார்.இவற்றின் அருகில் மருத்துவமனை நிருவி வேவ்வேறு நோய்களுக்கு தனி பகுதி(வார்டுகள்),மருத்துவர்களுக்கு நூலகம்,ஒரு மருந்தகம் என்று ஒரு கலவன் மருத்துவ மனையாக இருந்தது. இது இன்று கண் மருத்துவமனையாக பயண்டுகின்றது.


மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, எலும்பியல் மற்றும் முறையான நோய்கள் தொடர்பாக  பல பெரிய மருத்துவமனைகள் பல காணப்பட்டன. இங்கு முறையான நோய் எனப்பட்ட உள் மருத்துவ த்திற்கு சமனானது மேலும் காய்ச்சல்,சமிபாடு பிரச்சினை என பல் வேறு பிரிவுகள் இருந்தது. இதில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு அதிகாரி,தலைமை அதிகாரி மற்றும் ஒரு மேற்பார்வையாளர் என்று மருத்துவமனையில் விரிவுரைகளும் அதற்கு அரங்கும் நூலகமும் மருத்துவ மனையில் சுகாதார உழியர், தூய்மை பணியாளர், கணக்காளர் மற்றும் பிற உழியர் நிர்வாக உழியர்கள என பலர் அடங்குவர்.

மருத்துவமனை பொதுவாக 3 பேர் கொண்ட குழுவால் நடாத்தப்பட்டது.
1.மருத்துவர் அல்லாத நிர்வாக அதிகாரி
2.
தலைமை மருத்துவர்
3.
ஷேக்


10ஆம் நூற்றாண்டில் மருவத்துவமனை 24 மணி திறந்திருந்தது.
குறைந்தவு தீவிர சிகிச்சை பிரிவு,வெளி நோயாளர் எனும் பகுதி இருந்தது.அவசர கால நிலைமைகளில் முதலுதவி மைய்யங்களும் இருந்தன.
வெள்ளிக்கிழமை தொழுகை நிறைவேற்ற நோயளர்களுக்கு; மருத்துவர்களுக்கு; உழியர்களுக்கு வசதி இருந்தது.
பாக்தாத் தலைமை மருத்துவ அதிகாரி "அலி இப்னு ஈசா இப்னு ஜரா இப்னு தபிட்" எழுதிய புத்தகத்தில் 10ஆம் நூற்றாண்டில் குற்றவாளிகளுக்கு தனியான மருத்துவமனை  இருந்ததாக குறிப்பிடுகின்றார்.


எகிப்தில் தென் மேற்கில் முதன் முதலில் கட்டப்பட்ட முதல் மருத்துவமனையாக மனநோய் மருத்துவ மனை யாக விளங்கியது.
அலெப்போவின் அர் குன் மருத்துவமனையில் மனநோய்க்கான கவனிப்பில் எராளமான ஔி,புதிய காற்று,ஒடும் நீர் போன்று அழகிய முறையில் கட்டப்பட்டிருந்தது.
மருத்துவ மாணவர்கள் நோயாளர்களை கவனிப்பர். இந்த கால கட்டத்தில் மருத்துவர்களுக்கு டிப்ளோமா தகைமை கோரியது.
டிப்ளோமா சான்றிதழை பரிசோதனை செய்ய தலைமை மருத்துவ அதிகாரியால் மேற்கொள்ளப்படும்.


இதில் இரண்டு படிமுறைகள் உண்டு. முதலாவது மருத்துவ சான்றிதழை பரிசோதிக்கப்படும். இரண்டாவது  பேட்டி மூலம் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் பரிசோதனை நடைபெறும்.

மேலும் மருத்துவ மாணவர்களுக்கு ஒரு பிழையை குறித்து ஆராய ஊக்குவிக்கப்படும். மருத்துவ சான்றிதழை பெற விரும்புவோர் அடிப்படை அறிவைப் பெற்று பழைய நூல்களை ஆராய்ச்சி செய்தல் வேண்டும்;வர்ணணை மேற்கொள்ள வேண்டும்
மருத்துவர்களுக்ககான பணி நேரம், சம்பளம் சட்டதால் நிர்ணயம் செய்யப்படும்.
ஒரு நோயாளி இறந்து விட்டால் அந்த உடல் சம்பந்தமான பரிந்துரைகளை தலைமை மருத்துவ அதிகாரியிடம் முறைப்பாடு மேற்கொள்முடியும்.
அவர் மரணம் இயற்கையானதா? செய்கையானதாக? அலச்சியம் மூலம் இறந்தால் அவர்களுக்கு இழப்பிடு வழங்கப்படும்.


ஆண் மருத்துவர்களால் ஆண் நோளிகளையும் பெண் மருத்துவரகளால் பெண்களும் சிகிச்சைஅளித்தனர். குறிப்பாக மகப்பேறறில் பெண்கள் அதிக கவனம் செலுத்தினர். பணம் செலுத்த முடியாத நோயாளர்களை கவனிப்பதற்கு வக்குப் சபை இருந்து.அதிகமாக இலவாசமாக மருத்துவம் செய்யப்பட்டது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home