இஸ்லாமிய நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மக்கா,மதீனா,கூபா,கெய்ரோ ஆகிய நகரங்களின் பங்களிப்பு
இஸ்லாமிய நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மக்கா,மதீனா,கூபா,கெய்ரோ ஆகிய நகரங்களின் பங்களிப்பு
மக்கா
அறேபிய தீபகற்பத்தில் ஹிஜாஸ் மாகணத்தில் 'மக்கா' அமைந்துள்ளது. இந்த நகரை அல்குர்ஆன் 'பக்கா' உம்முல்குரா' அகிய பெயர்களால் அழைக்கப்படுகிறது.
பாரசீக சாம்ராஜியத்துக்கும் உரோம சாமராஜியத்திற்கும் இடையில் வர்த்தகத் தொடர்புகளை முற்காலத்தில் ஹிஜாஸ் மக்களே மேற்கொண்டதால் அதன் தலைநகராகிய மக்கா சிறப்பு பெற்று வர்த்தகத் தலைநகரமாகத் திகழ்ந்தது.'கஃபா'வின் புனிதத் தனமையும் 'ஸம்ஸம்' கிணற்றின் பயன்பாடும் வர்த்தகத்தை மேலும் அதிகப்படுத்த உதவின.
நபிகளார் இஸ்லாத்தை போதிக்க தொடங்கிய காலகட்டத்தில் பெரும்பாலான தலைவர்கள் இஸ்லாத்தை எற்கவில்லை. இஸ்லாத்தில் பெரும் பலும் நடுத்தரவர்க்க, எழை மக்களே இணைந்தனர்.இஸ்லாத்தை எற்காத குறைஷியரின் கொடுமைகளினால், இறை கட்டளைப்படி நபியவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டதால் மக்காவின் முதன்மை குறைந்தது.
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டில் முஸ்லிம்கள் கைப்பற்றியவுடன் பின் அரேபியாவின் தலைநகராக மாறியது. இதனால் மக்கா அரசியல் தனித்துவத்தையும் இழந்தது. ஆயினும் சமய புண்ணிய ஸ்தலமாக மக்கா கணிக்கப்பட்டதால் அரசியல் குழப்பங்கள்,கலவரங்களில் இருந்து அது பெருமளவு பாதுகாக்கப்பட்டுள்ளது.
குலபாஉர்ரஸிதூன்கள் காலத்திலிருந்து மக்கா இஸ்லாமிய ஆட்சியிலேயே வணக்கவாளின் உறைவிடமாகவும் கலைகளின் இருப்பிடமாகவும் விளங்கியது. ஹதீஸ்,பிக்ஹ்,தப்ஸீர் முதலிய கலைகள் அங்கே வளர்ச்சி பெற்றது. ஆயினும் மக்கா வெற்றியின் முன்பைப்போல வர்த்தக சந்தை நடவடிக்கைகள் இடம் பெறவில்லை,யூப்பிரடீஸ் நதிக்கரையூடாக அமைந்த தரைமார்கக வர்த்தப் பாதையும் மக்காவின் செல்வாக்கு குறைய ஒரு காரணியாகும்.
கலீபா முஆவியா(ரழி) அவர்கள் காலத்தில் மக்கா மீண்டும் பொழிவு பெற்றது. கட்டிடங்களை அமைத்தும்,நீர்ப்பாசன வசதிகள் செய்து மக்காவை வளப்படுத்தினார்.
குலபாஉர் ராஸிதூன்கள் காலத்திலிருந்து உரோம பாரசிக பிரதேசங்கள் முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்குட்பட்டதால் மதினாவிலும் மக்கவிலும் பொருள் வளம் பெருகியது. மக்கா எகிப்து,பாரசிகம் முதலிய பகுதிகளின் கலாச்சார தாக்கதால் மக்காவில் பாடலில் வல்லுனராய் விளங்கிய பெண்கள், மக்கா வாசிகளில் வீடுகளில் அடிமைகளாக வாழ்ந்தனர். இசை விற்பன்னர்களும் கவிஞர்களும் மக்காவில் செல்வாக்குமிக்கவராயின இது உமைய்யா காலம் முதல் வளரத் தொடங்கியது.
மதீனா
இது ஹிஜ்ரத்துக்கு முன் 'யஸ்ரிப்' என அழைக்கப்பட்டது. ஹிஜ்ரத்திற்கு பிறகு 'மதீனதுன் நபி' என்ற சிறப்பு பெயர் பெற்றது. அப்பெயரே மருவி மதீனா என வழங்கப்பட்டது.
இங்கு யூதர்களும், அவ்ஸ், கஸ்ரஜ கோத்திரத்தாரும் குடியேறி வாழ்ந்து வந்தாலும் நபியர்வகளும் ஸஹாபாக்களும் ஹிஜ்ரத் மேற்கொண்டதான் பின்பே இதன் முக்கியதுவம் கூடியது.
மதீனா இஸ்லாமிய குடியரசின் தலைநகராக மாறியது. முதல் மூன்று கலீபாக்களும் மதீனாவை தமது தலை நகராக கொண்டிருந்தனர். மதீனாவின் வளர்ச்சி உரோம, பாரசிக பேரசுகளுக்கு சவாலாக விளங்கியது. ஆயினும் உஸமான் (ரழி) அவர்களின் காலத்தில் எற்பட்ட கிளர்ச்சி காரணமாக செல்வாக்கு குன்ற காரணமாக அமைந்தது.
நான்காம் கலீபா அலி (ரழி) தலை நகரை கூபாவுக்கு மாற்றியதால் மதீனா செல்வாக்கு குறைந்து. பின்பு உமைய்யாக்கள் டமஸ்கஸையும் அப்பாஸியர் பக்தாதையும் தலைநகரா ஆக்கிக் கொண்டதால் மதீனாவின் அரசியல் செல்வாக்கு பெருமளவில் இழந்தது. ஆயினும் மதீனா ஹஜ் யாரத்திரை செல்வோரால் வருடாவருடம் தரிசிக்கப்படுவதால்,ஆன்மீகத்தில் முக்கியதுவம் இழக்காமலே காணப்பாடுகிறது.
நாகரிக வளர்ச்சியில் மதீனா முக்கிய பங்கை வாகித்துள்ளது. அல்குர்ஆன்,ஹதிஸ்,பிகஹ் போன்ற கலைகள் வளர்ச்சிக்கு அத்திவாரமாய் அமைநத களம் மதீனாவே;மதீனாவில் வாழ்ந்த ஸஹாபாக்கள் வாழ்வு உலக முழுவதும் பரவிய இஸ்லாமிய பரம்பலுக்கு முன்மாதிரியாக அமைந்தது. அதனால் உலக இஸ்லாமிய நாகரிகத்தில் பெரும் பங்கை அது வகித்தது. மதீனாவில் அமைந்த மஸஜிதுன் நபவி இஸ்லாமிய கால மத்திய நிலையமாக விளங்கியது.
எனவே மதீனாவின் வளர்ச்சி இஸலாமிய நாகரிகத்தில் பெரும் பங்கு உண்டு.
பக்தாத்
பபிலோனில் பாரசிக மன்னன் அனூசிவானின் கோடை வாசஸதலமாக இருந்த இடத்திலே,அப்பாஸிய கலீபா அபூ ஜஃபர் அல் மன்சூர் 'பக்தாத்' நகரை நிர்மாணித்தார். தைக்கிரிஸ் நதிக்க கரையின் மேற்கு திசையில் அமகை்கப்பட்டது. பின்னர் வந்த ஆட்சியாளர்கள் கிழக்கு பக்கமாக நகரை விஸதரித்தனர். வர்த்தக பாதையின் மைய்யமாகவும், சிறந்த இறங்கு துறையாகவும் விளங்கிய இந் நகர் வர்த்தகத்தில் சிறந்து காணப்பட்டது.
இந்நகரில் மிக நவீன முறையில், பாதுகாப்பு மிக்க கோட்டைகள் அமைக்கப்பட்டன.பக்தாத் நகரை சுற்றிலும் பெரும் மதில்கள் அமைக்கப்பட்டன.பஸராவாசல், குராஸான்வாசல், கூபா வாசல் , சிரியா வாசல் ஆகிய நான்கு வாசல்கள் அமைக்கப்பட்டன.வட்ட வடிவான இந்த நகரின் ஒவ்வொரு வாசல்களுக்குமான தூரங்களும் சம அளவில் காணப்பட்டன. நகர வாசல்களின் அடியில் படைவீரர்கள் காவல் இருந்தனர்.
நகரத்தின் மத்தியிலே மஸ்ஜித்களும் மாளிகைகளும் நிறுவப்பட்டன.
பக்தாத் நகரம் பெருள் வளத்தில் சிறந்து விளங்கியமையை கலீபா மாமூனின் திருமணமும், 'ஆயிரத்தோர் இரவு' கதையும் நன்கு உணர்த்துகின்றன. செலவத்தில் மட்டும் அல்லாது அறிவியலியலிலும் சிறந்து காணப்பட்டது. கலைஞர்களும் அறிஞர்களும் அங்கு கௌரவிக்கப்பட்டனர். தப்ஸிர், பிக்ஹ், அல்ஹதீஸ், வரலாறு, தத்துவம், வைத்தியம், புவியியல், கணிதம், மெய்யியல், அழகியல் முதலிய கலைகள் வளர்க்கப்பட்டன. பக்தாத் நகர் முழுவதும் கலாசாலைகளும் பல்கலைகழகங்களும், நூல் நிலையங்களும், புத்தகசாலைகளும், மருத்துவமனைகளும், மொழிபெயர்ப்பு நிலையங்களும் நிறைந்து காணப்பட்டன.
இவ்வாறு பக்தாத் நகரம் கலைகள் பலவற்றில் சிறந்தாக காணப்பட்டாலும் பின்னர் எற்பட்ட உள்நாட்டுக கலவரங்களினாலும்(கி.பி 1258 இல்) மங்கோலியர் நாகரிகச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டமைனாலும் பொலிவு இழந்தது. பல படையெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதால் பக்கதாதுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்டதால் இற்றை வரை பழைய நிலையை திரும்ப முடியாத நிலைமை காணப்படுகின்றது.
கெய்ரோ
'காஹிரா' என்ற அறபு பெயரை கொண்ட இந்த நகர், மருவி இன்று'கெய்ரோ' என்று அழைக்கப்படுகின்றது.கி.பி 969 இல் பாத்திமி ஆட்சியளர்களரான முஇஸ் என்பவரின் தளபதி ஜவ்ஹர் எகிப்தை கைப்பற்றினார். அவர் தலைநகராக்கிய நகரே(காஹிராவென்ற)கெய்ரோவாகும்.இது இரு மைல் நீளமும் ஒரு மைல் அகலமும் கொண்ட சாதாரண நகராகவே இருந்தது.
இந்த நகரின் நடுவினிலே இரு நதாகுதிகளாக அரச மாளிகை அமைப்பட்டது. இரு தொகுதிகளுக்கமிடையில் அமைந்திருந்த
முற்ற வெளியில் இரணுவ அணிவகுப்புகள், ஊர்வலங்கள், வைபவங்கள் இடம் பெற்றன.
இதுவேஇன்றைய'ஜாமிஆ அல்அஸ்ஹர்' ஆகும்.மாளிகையையும் மஸ்ஜிதையும் சூழ பல்வேறு குடியிருப்புகளுக்கான ஒழுங்கைகள் இருந்தன.
கெய்ரோ, அரசியல், இராணுவ ரீதியாக முக்கியத்துவம் பெற்றாலும்,வர்த்தக மத்திய நிலையமாக முக்கியம் பெறவில்லை. முஸ்தன்ஸிர் என்பவருடைய ஆட்சியின் போது நகரம் பொலிவு இழந்தது. ஆயினும் பத்ரு அல் ஜமால் என்பவருடைய காலத்தில் பொருளாதாரத்தில் அது சிறப்படைந்தது. ஐயூபி ஆட்சியாளரான சுல்தான் சலாகுதீன் ஆட்சியின் போது பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலமாக்கப்பட்டது. சுல்தான் ஸலாஹுதீன், தன் மருமகள் மலிக்அல் காமிலுக்காக ஒர் அரண் மனையை அமைத்து கொடுத்தார். அந்த மாளிகை இளவரசர்களின் இருப்பிடமாயிற்று. இதன் காரணமாக உயர் பிரபுக்கள்,உயர் குலமக்கள் கெய்ரோவில் குடியேறி வழியேற்பட்டது. ஐயூபியர் ஆட்சிக்காலத்திலே, 'மஸ்ஜித் அஸ்ஸாஹிர்',மஸ்ஜித் அல் முஅய்யத் என்ற இரு பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன.